ஜெ. சிறை தண்டனை: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 ஆண்டுகள் நடந்த வழக்கில் இப்போது தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தை பாரதீய ஜனதா மதிக்கிறது. நீதிக்கு உட்பட்டே அனைவரும் நடக்க வேண்டும்.

இது போன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
நீதி மன்றத்தால் தமிழக முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.இது அ.தி.மு.க.வினருக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கும்.
தற்போது இங்கு அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. எனவே அவர்கள் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.தவறு யார் செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனை அளிக்கபட்டு நீதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications