சிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசளிப்பதாக பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 6 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
அது போல் தலைநகர் டெல்லியில் இரு மாதங்களாக பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்திற்கு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் பாஜக ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்கள் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டார் என நிரூபித்தால் அவர்களுக்கு ரூ 1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் One Crore Challenge என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டு இருக்காங்கனு சொல்லுங்க; நான் பதில் சொல்றேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமடைந்தார்.