பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்.. மதுரையில் தமிழிசை தலைமையில் தொடங்கும்!

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த போராட்டம் ஜனவரி 24-ல் தமிழகம் முழுக்க நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

BJP protest against bus fare hike on Jan.24

இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த புதிய கட்டண முறை நேற்றில் இருந்து அமலுக்கு வந்து இருக்கிறது.

இந்த கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக குரல் கொடுத்துள்ளது. பொன்.ராதாகிருஷ்னன் கட்டண உயர்வை ஆதரித்துள்ள நிலையில் அந்த கட்சியில் உள்ள மற்ற தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இந்த கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்து இருக்கிறது. ஜனவரி 24-ல் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்படும். இந்த போரட்டம் மதுரையில் தொடங்குகிறது.

மதுரையில் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கிருஷ்ணகிரியில் ஹெச்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஈரோட்டில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பாஜக தொண்டர்களை போராட்டத்திற்கு தயாராக இருக்கும்படி அந்த கட்சி தெரிவித்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+