சசிகுமார் கொலைக்கு கண்டனம்... தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை, ஹெச்.ராஜா கைது
சென்னை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள், வணிக நிறுவனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. சில இடங்களில் திறந்து இருந்த கடைகள், ஒரு ஏ.டி.எம். ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் ஒருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்தார்.

இந்நிலையில், சசிகுமார் கொலை குற்றவாளியை கைது செய்ய கோரியும், தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதாக கூறிய போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறினார்.

அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்பட பாஜக நிர்வாகிகள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் விழுப்புரம், நெல்லை, மதுரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications