கைது பீதி.. பதுங்கியிருக்கும் எச் ராஜாவுக்கு காவலாக பண்ணை வீட்டில் குவிந்திருக்கும் பாஜக நிர்வாகிகள்
Recommended Video

சிவகங்கை: நீதிமன்றம் மற்றும் போலீசாரை அவதூறாக பேசியதால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால் பதுங்கியுள்ள எச் ராஜாவுக்கு காவலாக அவரது காரைக்குடி பண்ணை வீட்டில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று முன்தினம் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவர் இழிவாக பேசினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
|
வழக்குப்பதிவு
எச் ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எச்.ராஜா மீது வழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
|
திருமயம் காவல்துறை
புதுக்கோட்டை திருமயம் காவல் துறையினர் எச் ராஜா மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 505,501,143,188,553, 153A உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
பகையை உருவாக்குவது
அவதூறு , அவமதிப்பு , அனுமதி இன்று கூடுதல் , உத்தரவிற்கு கட்டுப்படாமை உள்ளிட்ட உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 153A பிரிவு என்பது ஜாதி மதம், ஊர், மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் இரண்டு பிரிவிற்கிடையே பகைமையை உருவாக்குவது என்பதாகும்.

தனிப்படை போலீஸ்
போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து எச் ராஜா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் எச் ராஜாவை கைது செய்ய இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் பதுங்கல்
இதைத்தொடர்ந்து எச் ராஜா தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனக்கு சொந்தமான பண்னை வீட்டில் எச் ராஜா பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

நிர்வாகிகள் காவல்
அவரது வீட்டில் மாவட்ட பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இரவில் இருந்து தங்கியுள்ளனர். எச் ராஜாவை காவல்துறை கைது செய்தாலும் செய்யலாம் என்பதற்காக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் சிலர் எச் ராஜாவுக்கு காவலாக இரவில் இருந்து அவரது பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர் .
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications