கற்ற 'வித்தைகள்' அத்தனையையும் 'இறக்கி' ஜெயிச்சுட்டாங்களே.. பாஜக வேட்பாளர் புலம்பல்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிகார பலம், பண பலம் உட்பட அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, அதிமுக வெற்றி பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம்.
நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று அதிமுக அபார வெற்றி பெற்றது. திமுகவிற்கு இரண்டாம் இடம் கிடைத்தது. பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்குகள் தேறவில்லை.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
ஆளுங்கட்சி அதிகார பலம், பண பலம் உட்பட அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகள் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தியே மக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றன. இடைத்தேர்தலில் திமுகவும் குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளதால், மக்கள் அவர்களையும் புறக்கணித்து விட்டனர்.
இடைத்தேர்தல்களில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகிறது. மக்களுக்கு கொடுத்து பழக்கப்படுத்தி விட்டதால், பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எல்லோரிடமும் பணத்தை எதிர்பார்க்கின்றனர். அதிமுகவினர் பணத்தை கொடுத்து விட்டு சத்தியமும் வாங்கி உள்ளனர்.
இப்படியெல்லாம் ஓட்டு வாங்கிவிட்டு அம்மா ஆட்சிக்கு கிடைத்த வெகுமதி என எப்படித்தான் கூசாமல் சொல்கின்றனரோ? வரும் 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வளர்ச்சிக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் மக்கள் ஓட்டுப் போடுவர்; அப்போது பாஜக வெற்றி பெறும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தி, பாஜக என்பதில் சந்தேகமில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications