ஜாக்பாட்.. ஒரே கல்லில் 2 மாங்காய்! எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளரானதால் பாஜகவுக்கு நல்லதாம் - எப்படி?
சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள நிலையில், இதனால் அக்கட்சிக்கு ஜாக்பாட் அடித்து இருப்பதுடன் பாஜகவுக்கு நல்லது என்று கூறி உள்ளார் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கூட்டியது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் அணி வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வழங்கிய உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அறிவித்தது.
அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தன்னை அறிவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்த நிலையில், இது தொடர்பாக 10 நாட்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது. டெல்லி உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதியளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்தது. அதிமுக மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை உடனே அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து உள்ளது. மேலும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்று இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர். இன்று அஇஅதிமுகவுக்கு ஜாக்பாட். நாள் ஒரே கல்லில் 2 மாங்காய். ஆம், அதன் பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் அவர்களும் அதன் தேர்தல் சின்னமாக இரட்டை இலையும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதுதான். ஒரே கல் இரண்டு பழம்.
ஆக பாஜக தன் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாது. மற்ற கட்சிகளை வீழ்த்த பயன்படுத்தாது. தன் திறமையிலும் பலத்திலும் நம்பிக்கை கொண்ட கட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். நேர் மாறாக காங்கிரஸ் சக கட்சிகளை தன் ஆட்சி அதிகாரம் கொண்டு அடக்கியது. அச்சுறுத்தியது. அழித்தது என்பதை நாம் வரலாற்றில் பார்த்தோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications