ஜாக்பாட்.. ஒரே கல்லில் 2 மாங்காய்! எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளரானதால் பாஜகவுக்கு நல்லதாம் - எப்படி?
சென்னை: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள நிலையில், இதனால் அக்கட்சிக்கு ஜாக்பாட் அடித்து இருப்பதுடன் பாஜகவுக்கு நல்லது என்று கூறி உள்ளார் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கூட்டியது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் அணி வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வழங்கிய உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அறிவித்தது.
அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தன்னை அறிவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்த நிலையில், இது தொடர்பாக 10 நாட்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது. டெல்லி உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதியளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்தது. அதிமுக மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை உடனே அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து உள்ளது. மேலும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்று இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர். இன்று அஇஅதிமுகவுக்கு ஜாக்பாட். நாள் ஒரே கல்லில் 2 மாங்காய். ஆம், அதன் பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் அவர்களும் அதன் தேர்தல் சின்னமாக இரட்டை இலையும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதுதான். ஒரே கல் இரண்டு பழம்.
ஆக பாஜக தன் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாது. மற்ற கட்சிகளை வீழ்த்த பயன்படுத்தாது. தன் திறமையிலும் பலத்திலும் நம்பிக்கை கொண்ட கட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். நேர் மாறாக காங்கிரஸ் சக கட்சிகளை தன் ஆட்சி அதிகாரம் கொண்டு அடக்கியது. அச்சுறுத்தியது. அழித்தது என்பதை நாம் வரலாற்றில் பார்த்தோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள்












Click it and Unblock the Notifications