சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதாக புதிய நீதிக் கட்சி ஏ.சி. சண்முகம் அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி நீடிப்பதாக அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில 3 மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் படுமும்முரமாக உள்ளன.

இதில் பாஜக சார்பில் கூட்டணி குறித்து பேசுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகிய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் முதலில் சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தருடன் இக்குழு கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் சதக்கத்துல்லாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதேபோல் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை இன்று காலை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இல.கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது சட்டசபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஏ.சி.சண்முகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து புதிய நீதிக்கட்சி இணைந்து பணியாற்றும் என உறுதி அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications