நாட்டுக்கு எதிரான தீய சக்திகள்தான் கம்யூனிஸ்டுகள்: ஹெச்.ராஜா தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கம்யூனிஸ்டுகள் என்றாலே நாட்டுக்கு எதிரான தீய சக்திகள்தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நாட்டில் வன்முறையை தூண்டிவருகின்றன. சீனாவில் உரிமைக்காக போராடிய மாணவர்கள் பத்தாயிரம் பேரை கொலை செய்த சம்பவத்தை பற்றி நான் கூறவில்லை. ரஷ்யா பற்றி கூறவில்லை. இந்தியாவில், கடந்த 15ம் தேதி அவர்கள் நடத்திய வன்முறையை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. தாத்ரியில் நடந்த கொலை சம்பவத்தின்போது நாடே தூண்டிவிடப்பட்டது. இதுதான் மதசார்பின்மை என போதிக்கப்பட்டுள்ளது.

BJP to use Modi govt's achievements as 'election weapon'

கம்யூனிஸ்டுகள் என்றாலே தீய சக்திகள். நாட்டுக்கு எதிராக பிரிவினையை தூண்டி வருபவர்கள். மக்கள் நல கூட்டணி இன்னும் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்காது. அப்படி ஒரு, ஜனநாயக விரோத கூட்டணி தமிழ்நாட்டில் இல்லாமல் இருப்பது மாநிலத்துக்கு நல்லது.

வைகோ இருப்பதாலேயே அந்த கூட்டணி உடையும். வைகோவின் குணம் அப்படிப்பட்டது. விஜயகாந்த்தை கூட்டணிக்கு வர கூறிய வைகோ, இப்போது அவரை பற்றி கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் 3 வருடத்தில் 81 ஆணவ கொலைகள் நடந்துள்ளன. தலித்துகளை கொடுமைப்படுத்துவோருக்கு தண்டனை பெற்றுத்தருவதில், தேசிய சராசரியைவிட தமிழக சராசரி குறைவாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+