ரஜினியை வைத்து அரசியல் செய்ய துடிக்கிறது பாஜக... திருமாவளவன் பேட்டி
மதுரை: ரஜினியை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.க. துடிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர் முன்னணியினர் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

மேலும் ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதும் சரி, இ.பி.எஸ். முதல்வராக இருக்கும்போதும் சரி இருவருமே தமிழர்களின் விரோத போக்கை கடைப் பிடிக்கிறார்கள். 20 ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். அரசியலுக்கு வருவது அவர் கையில் தான் உள்ளது. ரஜினியை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.க. துடிக்கிறது.
நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். அவரது மறு சீராய்வு மனுவை பரிசீலிக்காமல் ஒதுக்கியது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது தவறான முன் உதாரணமாக இருக்கக்கூடாது. இது பற்றி நாடாளுமன்ற இரு அவைகளும் கூடித்தான் விசாரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications