'சவலைக் குழந்தைகள்' கூட்டணியில் இணைந்துள்ளார் விஜயகாந்த்: தமிழிசை சவுந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, மநகூவுடன் கூட்டணி அறிவித்துள்ள நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை என்று அதன் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

BJP will lead in Election - Tamilisai

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதில் எந்த விதத் தயக்கமும் இல்லை. திமுக, அதிமுகவை அப்புறப்படுத்துவதில் பாஜகவே பிரதான பாத்திரம் ஏற்கும்.

மக்கள் நலக் கூட்டணி ஒரு சவலைக் குழந்தை. மக்கள் நலக் கூட்டணியில் மக்கள் நலன் கிடையாது. பா.ஜ.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வந்திருந்தால், விஜயகாந்தின் நோக்கம் நிறைவேறி இருக்கும். பலமே இல்லாத கூட்டணியில் இருந்து கொண்டு விஜயகாந்த் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும். வாக்குகள் சிதறுவதால் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பாஜக தனித்து விடப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது குறித்து கவலை ஏதுமில்லை." என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+