பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக போராட்டம்.. தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த புதிய கட்டண முறை நேற்றில் இருந்து அமலுக்கு வந்து இருக்கிறது.
இந்த கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன. அதன்படி தமிழக பாஜக கட்சியும் இந்த கட்டண உயர்வை எதிர்த்துள்ளது.
மேலும் இந்த கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்து இருக்கிறது. ஜனவரி 24-ல் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் இந்த தகவலை தெரிவித்தார். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.