பாஜக 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆருடம்!
2014ஆம் ஆண்டு தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: 2014ஆம் ஆண்டு தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியை பிடிக்கும். சமூக வலை தளங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக நக்சலைட்டுகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பா.ஜ.க.வின் ஆலோசனையை கேட்கமாட்டார்.
சாமானியனின் குரல் சர்க்காருக்கு தெரியவில்லை என நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியானது தொடர்பான கேள்விக்கு தூணுக்கு பின்னால் நின்று பேசுவதற்கு பதிலளிக்க முடியாது. இவ்வாறு மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.