3 தொகுதியிலும் பாஜக வெற்றி பெறும் - தமிழிசை நம்பிக்கை
மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்சி: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி நீர் பிரச்சினைக்காக தி.மு.க. நடத்தியது அரசியல் சார்புடைய அனைத்து கட்சி கூட்டம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனிற்காக நிறைய நல்ல காரியங்களை செய்து உள்ளது.

ஒட்டு மொத்த விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக இருப்பது போல் பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். பொய் பிரசாரத்தை முறியடித்து தஞ்சாவூர் உள்பட 3 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் வைகோ, 3 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன் ? எனவும் கேள்வி எழுப்பினார் தமிழிசை சவுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications