For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மீது கல் வீசியது பாஜக கைகூலிகள் தான்.. இந்த கருத்தை பின்வாங்க மாட்டேன்.. வைகோ

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன் மீது கல் வீசியது பாஜகதான் என்ற கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன் மீது கல் வீசியது பாஜகதான் என்ற கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் கைகூலிகளாக இருந்து தன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியது பாஜகவினர் தான் என வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூத்த அரசியல்வாதியான வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

BJP workers only attacked me: Vaiko

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தன்மீது கல்வீசியது தொடர்பான கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதவாத கட்சிகள் காலுன்ற கூட என்பதற்காகவே திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் வைகோ கூறினார். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை தன்னை அவதூறாக பேசிய நிலையில் தற்போது பொன் ராதாகிருஷ்ணனும் பேசுகிறார் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.

மேலும் மத்திய அரசு ஒரு போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்றும் வைகோ தெரிவித்தார்.

English summary
Vaiko has categorically stated that he will not back down from the statement that the BJP was did stone pelting in the sterlite protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X