மனைவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி கணவனை மிரட்டிய டிரைவர் கைது
சேலம்: மனைவியின் ஆபாசப்படத்தை வெளியிடுவதாக கூறி கணவனிடம் மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தின், இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் கேசவன் (41). இவரது மனைவி செல்வி (35) (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கேசவன் கட்டிட மேஸ்திரியாக வேலை \பார்க்கிறார். சமீபத்தில் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஒரு ஆணுடன் செல்வி நிற்பது போன்ற படம் இணைக்கப்பட்டிருந்தது. போட்டோவில், செல்வியுடன் நிற்கும் ஆணியின் கழுத்துக்கு மேலுள்ள பகுதி மட்டும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதம் வந்த பிறகு ஒரு மர்ம நபர் கேசவனை தொடர்பு கொண்டு உனது மனைவி என்னுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பல என்னிடம் உள்ளன. ரூ.5 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் நகையை தராவிட்டால் அந்த படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்ிடனார்.
இதுகுறித்து அவர் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் கேசவன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த செல்போன் என்னை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், செல்வியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி கேசவனை மிரட்டியது தாரமங்கலம் அருகிலுள்ள பெத்தாம்பட்டி மேல்காடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் (38) என்பது தெரியவந்தது.
மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த நிலபுரோக்கர் ரகுபதி (32) என்பவரையும் கைது செய்த போலீசார் இருவரையும் சேலம் சிறையில் அடைத்தனர். செல்வியின் படம் செந்தில்குமாருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.