கோவையில் பதுங்கியிருந்த போடோ தீவிரவாதிகள் 2 பேர் கைது
கோவையில் பதுங்கியிருந்த போடோ தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை சூலூரில் பதுங்கியிருந்த போடோ தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் போடோ இனமக்கள் தனி மாநிலம் கோரி போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக போடோ இனமக்கள் வசிக்கும் பகுதியில் தன்னாட்சி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தன்னாட்சி கவுன்சிலுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்பதால் கூர்க்காலாந்து போராட்டகாரர்கள் போல நாங்களும் உக்கிரமாக போராடுவோம் என கூறி வருகின்றன போடோ அமைப்புகள். இந்த நிலையில் கோவை சூலூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இருவரை ராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
இருவரும் போடோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் சூலூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். ராணுவ புலனாய்வுப் பிரிவினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications