முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொலைபேசி மூலம் வந்த இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபலங்களுக்கும், பொது இடங்களுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ஒரு கெட்ட பழக்கமாகி வருகிறது. விமானங்கள், பள்ளி கல்லூரிகள், தலைமைச் செயலகம், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சகஜமாகி விட்டது.

அந்தவகையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுணடு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசிதகவல் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறியதாக தெரிகிறது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications