கோவையில் குண்டுகள் வெடிக்கும்: மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் மூலம் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Bomb threat in Coimbatore
கோயம்புத்தூர்: கோவையில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்குக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்குக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அக் கடிதத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு இடத்தில் சிலர் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்து கோவை நகரையே நாசமாக்க முடிவு செய்துள்ளனர்.

இது மிகவும் நம்பிக்கை வாய்ந்தவரிடம் இருந்து கிடைத்த தகவல். அசம்பாவிதம் நடைபெறும் முன் குண்டு வெடிப்பை தடுத்து நிறுத்த வேண்டுகிறேன் என்று கூறபட்டு இருந்தது.

இது தொடர்பாக ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து கோவை நகரில் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு வந்த மர்ம கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+