இடிந்தகரையில் சரமாரி வெடிகுண்டு வீச்சால் பதட்டம்- போலீஸ் குவிப்பு!
தூத்துக்குடி: இடிந்தகரையில் இரு மீனவர் கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இதில் சராமரியாக வெடிகுண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் உள்ளிட்டோர் இடிந்தகரையில் போராட்டத்தை முன்னிட்டு நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை ஓட்டி அவர்கள் ஊரை விட்டு வெளியேறிய போதிலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு கோஷ்டியினர் செயல்பட்டு வருகின்றனர்.
அணு உலை ஆதரவு, எதிர்ப்பு மீனவ கோஷ்டியினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 2013ல் இடிந்தகரையில் சுனாமி காலனியில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதன் எதிரோலியாக போலீசார் அதிரடி சோதனை செய்ய இருப்பதாக தகவல் கிளம்பியதால் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை கடலில் கரைத்து அழித்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் அணு உலை ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த செபஸ்தியான் என்பவருக்க சொந்தமான நாட்டுப் படகை சிலர் சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென இரு கோஷ்டியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதோடு சராமரியாக வெடிகுண்டுகளையும் வீசிக் கொண்டனர். 20க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குண்டுகளை மட்டும் போலீசார் கைப்பற்றினர்.
ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்டோர் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இந்த சம்பவதத்தால் கூடங்குளம், இடிந்தகரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications