Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடிந்தகரையில் சரமாரி வெடிகுண்டு வீச்சால் பதட்டம்- போலீஸ் குவிப்பு!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இடிந்தகரையில் இரு மீனவர் கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இதில் சராமரியாக வெடிகுண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் உள்ளிட்டோர் இடிந்தகரையில் போராட்டத்தை முன்னிட்டு நடத்தி வருகின்றனர்.

Bombs Fly in Group Clash at Idinthakarai

நாடாளுமன்ற தேர்தலை ஓட்டி அவர்கள் ஊரை விட்டு வெளியேறிய போதிலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு கோஷ்டியினர் செயல்பட்டு வருகின்றனர்.

அணு உலை ஆதரவு, எதிர்ப்பு மீனவ கோஷ்டியினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 2013ல் இடிந்தகரையில் சுனாமி காலனியில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதன் எதிரோலியாக போலீசார் அதிரடி சோதனை செய்ய இருப்பதாக தகவல் கிளம்பியதால் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை கடலில் கரைத்து அழித்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் அணு உலை ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த செபஸ்தியான் என்பவருக்க சொந்தமான நாட்டுப் படகை சிலர் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென இரு கோஷ்டியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதோடு சராமரியாக வெடிகுண்டுகளையும் வீசிக் கொண்டனர். 20க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குண்டுகளை மட்டும் போலீசார் கைப்பற்றினர்.

ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்டோர் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இந்த சம்பவதத்தால் கூடங்குளம், இடிந்தகரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+