கார்பைடு கற்களால் விபரீதம் – மாம்பழ பேரலை திறந்த சிறுவனின் கண்கள் தீயால் பாதிப்பு
சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா காஞ்சிரன் குளத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் முத்துசாமி . இவர் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஒரு ஆண்டாக கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த கடைக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் வருவது வழக்கம். காயாக வரும் பழங்களை கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க செய்து விற்பனை செய்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு இரும்பு பேரலில் கார்பைடு கற்களால் மாம்பழங்களை பழுக்க வைத்து இருந்தனர். நேற்று மாலை முத்துசாமி அந்த பேரலை திறந்தார். அப்போது திடீரென அதில் இருந்து வந்த தீ ஜுவாலை முத்துசாமி முகத்தில் பட்டது.
இதனால் முகம் கருகி அவர் அலறினார்.இதனால் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கண்ணில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். முத்துசாமியால் கண்களை திறக்க முடியவில்லை.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்பேரில் கோயம்பேடு மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கார்பைடு கற்களால் பழுக்க செய்த மாம்பழம் எடுக்க முயன்றபோது சிறுவன் கண்ணில் காயம் ஏற்பட்ட சம்பவம் கோயம்பேடு மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications