மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் தடுத்தால் மட்டுமே காவிரி பிரச்னையில் தீர்வு: வைகோ
மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் தடுத்தால் மட்டுமே காவிரி பிரச்னையில் தீர்வு கிடைக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

கும்பகோணம் : காவிரி பிரச்னையில் மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் தடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், கர்நாடக சட்டபைத் தேர்தலில் பாஜகவால் நிச்சயம் வெற்றி பெற முடியாது.

நாடு முழுவதும் பாஜக கொண்டுவந்த தவறான திட்டங்களால் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் பாஜகவை எதிர்க்கும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் தடுத்தால் மட்டுமே, காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், திராவிடத்திற்கும் ,திமுகவிற்கும் தான் எப்போதும் துணையாக இருப்பேன் என்றும், ஸ்டாலினுக்கு தலைமை ஏற்கும் முதிர்ச்சி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications