புதுக்கோட்டையில் விரைவில் அகல ரயில் பாதை பணி தொடங்கும் - ரயில்வே மேலாளர் சுனில்குமார் தகவல்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் விரைவில் அகல ரயில பாதையாக மாற்றும் பணி தொடங்கும் என்று அமமாவட்ட ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்கே முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ரயில்வே நிலையத்தை பாதுகாப்பு பணிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே லெவல் கிராசிங்கில் முறையாக பணியாளர்கள் பணியாற்றுகிறார்களா என்பது குறித்து புதுக்கோட்டை ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதன்பின்னர் ரயில தண்டவாளங்களின் தரம் குறித்து ரயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனில்குமார் கார்கே, "இது ஒரு வழக்கமான பாதுகாப்பு ஆய்வுதான். மேலும் மாவட்டத்தில் உள்ள பயன்படாத லெவல் கிராசிங்க்குளை மூடுவதற்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரோடு ஆலோசனை நடைபெற்றது. மேலும் இதேபோன்று புதுக்கோட்டையில் இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இது குறித்து 2வார காலத்திற்குள் அறிக்கை அனுப்பி வைப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
தஞ்சை-அறந்தாங்கி-காரைக்குடி ரயில்பாதையில் அகல ரயில்பாதையாக மாற்றும்பணி தாமதாகமாக நடந்து வருவதற்கு நிதி பற்றாக்குறையே காரணம். பண்டிகை காலங்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு மதுரை கோட்ட்டததில் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படும். மதுரை கோட்டத்தில் புதிய ரயில்கள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது குறித்து தென்னக ரயில்வே மற்றும் ரயில்வே போர்டு தான் முடிவு எடுக்க வேண்டும்.
மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்தடங்களும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது மதுரை-தேனி-போடிநாயக்கனூர் பணிகள் இதே போன்று செங்கோட்டை-புனலூர் ரயில் பாதை அகல ரயில் பாதையாக விரைவில் மாற்றும் பணி தொடங்கும்.
தற்போது புதுக்கோட்டை ரயில்வே நிலையம் பி கிரேடாக உள்ளது. ஏ கிரேடாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2016-17ம் ஆண்டில் புதுக்கோட்டை ரயில் நிலையம் ஏ கிரேடாக தரம் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதே போன்று புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில்மூடப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தை வங்கிகளில் பேசி மீணடும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் புதுக்கோட்டையில் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications