திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் உடைந்த சாமி சிலைகள்... பக்தர்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் உடைந்த சாமி சிலைகள் கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு அதிக. அளவில் உள்ளூர், மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சமீப காலமாக பக்தர்களை வேதனைக்குள்ளாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் உடைந்த சுவாமி சிலைகளை எடுத்து வந்து இரவோடு, இரவாக திருச்செந்தூர் கடற்கரையில் போட்டு விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கடலில் நீராடும் இடங்களில் சுவாமி சிலைகள் கிடப்பதால் அவற்றின் மீது குழந்தைகள் ஏறி விளையாடூவதும், மணல்களை அள்ளி போட்டு மூடுவதுமாக இருக்கின்றனர். இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூரை சேர்ந்த பாஜக துணை தலைவர் செந்தில்வேல் கூறுகையில்,
கோயில்களில் சிலைகள் உடைந்து சிதிலமடைநது போய் விட்டால் அதை அங்கே வைத்து வழிபாட மாட்டார்கள். அப்படி அகற்றப்படும் சிலைகளை ஆழ் கடல் பகுதிகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் போடுவது வழக்கம். ஆனால் திருச்செந்தூர் கடற்கரையில் கடந்த சில நாட்களாக உடைந்த சுவாமி சிலைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றை கொண்டு வருபவர்கள் கடலில் போடாமல் கரையில் போட்டு விட்டு செல்கின்றனர். இதை கோவில் நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என கூறினார்












Click it and Unblock the Notifications