பி.எஸ்.என்.எல் இணைப்பு வழக்கு – தயாநிதி மாறன் பி.ஏ உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை: பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் கோரி மனு செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கவுதமன் உள்ளிட்ட மூன்று பேரின் மனுக்களும் நாளைக்கு விசாரணைக்கு வருகின்றன.

இவர்களின் மனு குறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடான வகையில், சட்டவிரோதமாக சன் டிவிக்குப் பயன்படுத்தியதாக சிபிஐ புகார் கூறியுள்ளது. இதுதொடர்பாக வழக்கும் பதிவலு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜனவரி 21 ஆம் தேதி தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கெளதமன், சன் டி.வி. தொழில்நுட்ப ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது.
இவர்களை சிபிஐ காவலில் எடுக்க முயற்சித்தது. ஆனால் கோர்ட் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 3 பேரும் ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர். இந்த மனுக்கள் நா்ளைக்கு விசாரணைக்கு வருகின்றன.












Click it and Unblock the Notifications