அக்டோபர் 1 முதல் அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்கிறது பி.எஸ்.என்.எல்.
சென்னை : பி.எஸ்.என்.எல். இணைய சேவையை, அக்டோபர் 1-ஆம் தேதி முதல், நொடிக்கு 2 எம்பி அதிவேகத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என, தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது...

பி.எஸ்.என்.எல், தற்போது குறைந்தபட்சம் நொடிக்கு 512 கே.பி.பி.எஸ்.(Kbps) வேகத்தில் இணைய சேவையை வழங்கி வருகிறது. அதிக வாடிக்கையாளர்களை கவர, தனது இணைய சேவையின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, பி.எஸ்.என்.எல். நிறுவன இணைய சேவையின் வேகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்பி அதிவேகத்தில் இணைய சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கும். எந்தவிதமான கூடுதல் கட்டணம் இன்றி, அதிக வேகத்தில் இணைய சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, "ப்ரீபெய்டு' வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், "புது வசந்தம்' என்கிற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் (life time validity) வசதியைப் பெற முடியும்.
விநாயகர் சதுர்த்தி நாளான நாளை (செப் 17) முதல் இத்திட்டம் அறிமுகமாகிறது. இந்தத் திட்டத்தில் உள்ளூர், வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 48 பைசா வசூலிக்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு, 1,000 நொடி அளவுக்கு இலவச அழைப்பு கிடைக்கப்பெறும். மூன்று மாதங்களுக்கு, மாதத்துக்கு 25 என்ற அளவில் எஸ்.எம்.எஸ், 50 எம்பி அளவுக்கு ஒரு மாதம் இணைய வசதி ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 15 செலுத்தினால் போதுமானது (சிம் கார்டு கட்டணமும் அடங்கும்). கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்களையும் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications