ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு சென்றவர்கள் வீட்டில் நகை, பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு சென்றவர்கள் வீட்டில் மர்மநபர்கள் 30 பவுன் நகை 60ஆயிரம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் கிராமம். இங்கு வசிப்பவர் ஆடிட்டர் சேர்மன் ஜெபராஜ். இவர் நேற்று தனது குடும்பத்தோடு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு நள்ளிரவு வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு பீரோவில்இருந்து இருந்த 215கிராம் தங்க பொருட்கள்,ரொக்கபணம் ரூபாய்.60ஆயிரம்,மற்றும் ஏ.டி.எம்.கார்டு ஆகிய பொருட்களை யாரோ மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.புகாரைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications