இடிந்த 11 மாடி கட்டடத்திற்கு அருகில் இருக்கும் அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்படுகிறது?
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 அடுக்குமாடி கட்டத்திற்கு அருகில் உள்ள 11 மாடி கட்டடம் இடிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
சென்னை மவுலிவா்க்கத்தில் 11 மாடிகள் கொண்ட இரட்டை குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் அதில் 1 கட்டடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டுமான உரிமையாளர்கள் 2 பேர், என்ஜினியர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த இரட்டை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள இடம் முன்பு குளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளத்தில் மண்ணை போட்டு மூடி கட்டடங்களை கட்டியுள்ளனர். இந்நிலையில் இடிந்த கட்டடத்திற்கு அருகில் உள்ள 11 மாடி கட்டடம் இடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கட்டடம் இடிந்த இடத்தில் இடிபாடுகளை அகற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் உதவியது. மெட்ரோ நிர்வாகம் சம்பவ இடத்திற்கு 2 கிரேன்கள், 10 லாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications