இறந்துபோன 2 பன்றிகளை புதைத்த தொழிலாளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்! வால்பாறை அருகே வனத்துறை கெடுபிடி
கோவை: காட்டுப் பகுதியில் உள்ள எஸ்டேட் தோட்டத்தில் செத்து கிடந்த இரு பன்றிகளை புதைத்த தோட்ட தொழிலாளிக்கு தமிழக வனத்துறை அதிகாரி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையடுத்த சோலையாறு வனப்பகுதியிலுள்ள எஸ்டேட் தோட்டம் ஒன்றில் பன்றி புதைக்கப்பட்டுள்ளதாக, வானாம்பள்ளி வனச்சரகர் அறிவொளிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு இன்று சென்று, ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த எஸ்டேட் பகுதியில் 2 பன்றிகள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தோட்டத் தொழிலாளியான அந்தோணி என்பவர்தான் பன்றிகளை புதைத்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, தோட்டத்தில் 2 பன்றிகள் இறந்து கிடந்ததாகவும், எனவே துர்நாற்றத்தை தவிர்க்க புதைத்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், வனத்துறைக்கு தகவல் கொடுக்காமல் காட்டில் பன்றியை புதைத்தது குற்றம் என்று கூறி, தோட்டத் தொழிலாளியான அந்தோணிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளார் அறிவொளி.
பன்றிகளை புதைத்ததற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தோட்ட தொழிலாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட கூலிகளான தோட்டத் தொழிலாளிகளால் இதுபோன்ற நெருக்கடியை எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications