ஒகேனக்கல் மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி - 30க்கும் மேற்பட்டோர் காயம்
ஒகேனக்கல்: ஒகேனக்கல் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்ற இரண்டு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தர்மபுரியிலிருந்து அஞ்செட்டிக்கு இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒகேனக்கல் அருகே கணவாய் என்ற இடத்தில் மலைப்பாதையின் வளைவில் பேருந்து திரும்பியபோது, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். டிரைவரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களே மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.
தை அமாவாசைக்காக ஒகேனக்கல் வந்தவர்களும், மற்ற பயணிகளும் இதில் அடங்குவர். அதிக பயணிகளை ஏற்றியதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம் மற்றும் தர்மபுரி மருத்துவமனைகளில் பயணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான காயமடைந்தவர்கள் தர்மபுரி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட மருத்துவமனைப் பணியாளர்கள் முதலுதவியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

பேருந்தானது முழுவதுமாக நொறுங்கிய நிலையில், தீயணைப்பு படையினர் சேதமடைந்த வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், திண்டுக்கல் - கரூர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், மற்றொரு கார் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications