கரூர் அருகே பஸ், லாரி மோதல்: 2 குழந்தைகள் உள்பட 24 பேர் படுகாயம்
கரூர்: கரூர் அருகே குளித்தலையில் தனியார் பேருந்து, லாரி மோதிய விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே குறப்பாளையம் பிாிவு சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார்
பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த லாாி மீது அந்த பேருந்து திடீரென மோதியது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும்
மருத்துவக் கல்லூாி மாணவி உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், தனியார் பேருந்தின்
அதிவேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications