கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள்.... கூட்டத்தால் திணறிய பஸ் நிலையங்கள்
நெல்லை: கோடை விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து பஸ் நிலையங்களில் நேற்று ஊர் திரும்ப வந்தோரால் திருவிழா கூட்டம் காணப்பட்டதால் அரசு போக்குவரத்து கழகம் திணறிப் போனது.
சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வசித்து வருவோர் கோடை விடுமுறையைத் தொடர்ந்து தங்களது பிள்ளைகள், குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதனால் தென் மாவட்டங்களில் கூட்டம் அலை மோதியது.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே பலரும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பி வந்தனர். நேற்று மாலை சொந்த ஊருக்கு பெருமளவிலானோர் திரும்பினர்.
நேற்று மாலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்ற அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் திருவிழா கூட்டம் காணப்பட்டது. இதில் காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டி விட்டது. தட்கல் டிக்கெட்டில் காத்திருப்போர் பட்டியல் 50ஐ தாண்டி விடடது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகள் தங்கள் ஊருக்கு செல்ல உடைமைகளை வைக்க வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அதிலும் இன்று அதிகாலையே சென்னையில் இறங்கி பள்ளி, அலுவலகததிற்கு செல்ல வசதியாக இருப்பதால் கன்னியாகுமரி பொதிகை எக்ஸ்பிரசில் அதிகப்படியான கூட்டத்தை காண முடிந்தது.
கடந்த சில நாட்களாக நெல்லை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முதியோர் டிக்கெட் தவிர மற்ற டிக்கெட்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதில் ரயில்களில் இடம் கிடைக்காத பயணிகள் பலர் தமிழக அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.
நெல்லை கோட்டத்தில் இருந்து மாலையில் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து திருப்பூருக்கு 8 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 8 சிறப்பு பஸ்களும், தென்காசி, சங்கரன்கோவிலில் இருந்து 4 பஸ்களும் இயக்கப்பட்டன. இதுபோல் நெல்லை வழியாக இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் பயங்கர கூட்டம் நிரம்பி வழிநதது.












Click it and Unblock the Notifications