ஏப்ரல் 5 -ம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் ஸ்டிரைக்.. திமுக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு!
காவிரி பிரச்சனைக்காக ஏப்ரல் 5 -ம் தேதி திமுக நடத்த இருக்கும் போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.
சென்னை: காவிரி பிரச்சனைக்காக ஏப்ரல் 5 -ம் தேதி திமுக நடத்த இருக்கும் போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

ஏப்ரல் 5 -ம் தேதி திமுக நடத்த இருக்கும் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திமுக நடத்த இருக்கும் போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. தமிழகம் முழுக்க கிராமம், நகரம் முழுக்க பேருந்துகள் இயங்காது.
இதனால் ஏப்ரல் 5 -ம் தேதி தமிழகம் முழுக்கு 70 சதவிகித பேருந்துகள் இயங்காது. 30 சதவிகித பேருந்துகள் மக்களின் அவசர தேவைக்காக இயங்கும் என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications