For Daily Alerts
Just In
பஸ் ஸ்டிரைக்.. சென்னையில், ஆட்டோ, டாக்சிகளில் கட்டண கொள்ளை.. ரயில்களில் நெரிசல்
சென்னையில் பஸ்கள் இயக்கப்படாததால், ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை: சென்னை, கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று இரவே பஸ்கள் ஸ்டிரைக் துவங்கி விட்டதால் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.
மக்களின் சிக்கலை மனதில் வைத்து, ஆட்டோக்கள், டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், கோயம்பேட்டிலிருந்து சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னையில் அரசு பஸ்கள் இயங்கவில்லை என்பதால், புறநகர் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பாதுகாப்புக்காக சென்னையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Comments
English summary
There are complaints that the taxies and autos operated with high fares in Chennai as government buses have not been operated.
Story first published: Monday, May 15, 2017, 8:54 [IST]