கர்நாடகா எல்லையில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. முழு அடைப்பு வெற்றி
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் தமிழக-கர்நாடகம் எல்லைப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஓசூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டத்தை நடைபெற்றது. ஓசூரில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதனால் தமிழக கர்நாடக எல்லையில் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

சிறு,குறு நிறுவனங்கள்
ஓசூரில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 2000க்கும் மேல் மூடப்பட்டன. ஓட்டல்கள், உழவர் சந்தைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் வெற்றி பெற்றது.
உழவர் சந்தை
தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்படும் காய்கறிகள் உழவர் சந்தையில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது. இங்குள்ள உழவர் சந்தை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் பெங்களூருக்கு காய்கறிகள் செல்வது முற்றிலும் தடைபட்டது.
போக்குவரத்து
கர்நாடகத்தில் தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு நிறைய பயணிகள் சென்று வருவது வழக்கம். இந்த முழு அடைப்பு காரணமாக பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை.
வர்த்தக நிறுவனங்கள்
இந்த முழு அடைப்பினால் 150 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் இந்த கடை அடைப்பில் பங்கேற்றன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications