தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தில் 3 தொகுதி, நெல்லித்தோப்பில் ஓய்ந்தது பிரசாரம்!
தேர்தலை சந்திக்க உள்ள தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் பிரசாரம் இன்றோடு ஓய்கிறது.
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தமிழகத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தஞ்சை, அவரக்குறிச்சி இரண்டும், பணப்பட்டுவாடாவால் நிறுத்தப்பட்ட தொகுதிகளாகும். திருப்பரங்குன்றத்தில் அதிமுக உறுப்பினர் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. - தி.மு.க. நேரடியாக களம் காண்கின்றன. மேலும், பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்பட சுயேச்சை வேட்பாளர்களும் கோதாவில் குதித்துள்ளனர். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாததால், அங்கு மட்டும் அந்த கட்சி போட்டியிடவில்லை.
கடந்த 5ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியானதை தொடர்ந்து, 3 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பறந்தது. 3 தொகுதிகளிலும் அனல் பறந்து வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தஞ்சையில் திமுக சார்பில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து ஸ்டாலின் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதேபோல், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகர் உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். இங்கும் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, வெளியூர்வாசிகள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆளுநர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டது திமுகவிற்கு நிச்சயம் சவாலானது.. அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன? -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
"திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்".. கமல்ஹாசன் சொன்ன சேதி! -
காமராஜரின் முதல் தோல்வி.. அண்ணாவின் கடைசி வெற்றி.. மறக்க முடியாத 1967 சட்டசபை தேர்தல்! -
1,000 மாடல் பள்ளிகள், 7 லட்சம் வீடுகள், தொழில்பூங்கா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு -
“திருச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் முதல்வர் ஸ்டாலின்”.. கேஎன் நேரு கொடுத்த அப்டேட்! -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
Rajya sabha: அன்புமணி வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு.. பரிசீலனையின்போது பரபர! -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு












Click it and Unblock the Notifications