ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.. மறுபரீசிலனை செய்ய சி.ஆர். சரஸ்வதி கோரிக்கை
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று சி. ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கோரியுள்ளார்.
பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விளையாட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி சுப்ரீம் தடைவிதித்தது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டல்ல என்றும், ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் சொல்லி இருப்பது போல் யாரும் காளைகளை துன்புறுத்துவது கிடையாது. காளைகள் இறந்ததாக வரலாறும் கிடையாது. காளைகள் மோதி இளைஞர்கள் இறந்திருக்கிறார்களே தவிர காளைகள் இறந்ததில்லை. இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. வீர விளையாட்டு. உச்ச நீதிமன்றம் நன்கு பரிசீலனை செய்து ஒரு நல்ல தீர்ப்பை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தமிழக அரசு தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இருந்தால் முதல்வர் தடை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்தி இருப்பார். இது மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சம்மந்தப்பட்ட விவகாரம். ஜல்லிக்கட்டின் தீர்ப்பு அவர்களின் கையில் இருப்பதால், எங்களால் முடிந்த வாதங்களை நாங்கள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசு இந்த விளையாட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து வருகிறது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பார்க்கும் போது உண்மையில் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. நீதிமன்றம் இதனை மறுபடியும் பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications