தேமுதிவுக்கு 4 சதவீத ஓட்டு வங்கி கூட கிடையாது: சி.ஆர்.சரஸ்வதி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேமுதிகவிற்கு 4 சதவிகித ஓட்டுக் கூட கிடையாது என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் மகளிர் அணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேமுதிக தனித்து தேர்தலை சந்திக்கும் என்றார்.

C.R.Saraswathi Slams Prema Latha speech about jayalalithaa

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சி.ஆர்.சரஸ்வதி, தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அது அக்கட்சியின் நிலைப்பாடு. அதைப் பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் தயாராக இல்லை.

ஆனால் இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை பிரேமலதா தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தேமுதிக கட்சியைப் பற்றி பேசட்டும். கட்சியின் நிலைப்பாட்டை பற்றி பேசட்டும். எப்போதுமே பிரேமலதா மேடை ஏறினால், ஜெயலலிதாவைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்கு எந்த தார்மீக உரிமையும் அவருக்கு இல்லை. எங்கள் இயக்கத்திற்கு வந்த பிறகுதான் 2011ல் அவர்களுக்கு முரசு சின்னம் கிடைத்து கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. வேண்டுமானால் முரசு சின்னத்தை திருப்பிக் கொடுத்துவீட்டு, தனியாக நின்று சின்னத்தை வாங்க சொல்லுங்கள்.

இந்தியாவில் 3-வது பெரிய இயக்கம் அதிமுக. தமிழகத்தில் 4 சதவிகித ஓட்டு வங்கிக் கூட தேமுதிகவுக்கு கிடையாது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் புரிய வைத்தார்கள். இப்போது மக்கள் மீண்டும் புரிய வைக்கக் போகிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+