குடும்பத்தொழில்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணிபுரியலாம் – அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: குடும்பத்தினர் நடத்தும் ஆபத்தில்லாத தொழில்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பணிபுரியலாம் என்று குழந்தை தொழிலாளர் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகள் குடும்பத் தொழில்களிலும், பொழுதுபோக்குத்துறையிலும், விளையாட்டுத்துறையிலும், விடுமுறை நாட்களிலும், பள்ளி முடிந்த பின்னரும் ஈடுபட புதிய சட்டம் வழிவகுக்கிறது.
தற்போதைய சமுதாயச் சூழலில் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை முழுமையாக தடைசெய்வது சரியான நடவடிக்கையாக இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், குழந்தை தொழிலாளர்களை நியமிப்பது பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 14 - 18 வயதிற்குப்பட்ட சிறுவர்கள் அபாயகரமான தொழில்களில் ஈடுபட அனுமதி கிடையாது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்த திருத்தப்பட்ட மசோதா வழிவகை செய்துள்ளது.
அதேவேளையில், முதல் குற்றத்திற்கு பெற்றோர்களுக்கு எந்த தண்டனையும் அளிக்கப்படாது. வேலைக்கு அமர்த்துபவர்களே முதல் குற்றத்திற்கு பொறுப்பாவார். பெற்றோர்களை பொறுத்தவரை திரும்ப, திரும்ப தவறு இழைத்தால் 10 ஆயிரம் வரை தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றமிழைப்பவர்களுக்கு 3 வருடம் சிறைதண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை தொழிலுக்கு அனுப்பும் பெற்றோருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
முதல்முறை தவறிழைக்கும்போது அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படாது. இரண்டாவது முறையிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications