For Daily Alerts
Just In
அதிமுக அணிகள் இணையலையே... காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் வருகைக்காக காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னை: அதிமுக அணிகள் இணையும் என்று ஜெயலலிதா சமாதியில் காத்திருந்த தொண்டர்கள் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணியினர் தரப்பில் ஆலோசனை நடத்தி வந்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்,
அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதாவின் சமாதியில் அறிவிப்பார்கள் என நேற்று தகவல் வெளியாகின. இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் குவிந்தனர்.
அணிகள் இணைப்பு குறித்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை. இணைப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் சென்னை மெரினாவில் கனமழை பெய்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
Comments
admk police security jayalalitha oneindia tamil video அதிமுக போலீஸ் பாதுகாப்பு ஜெயலலிதா ஒன்இந்தியா தமிழ் வீடியோ
English summary
ADMK Cadres were disappointed over the non merger of both the factions yesterday.