'என்னை தருண் தமிழ் விஜய் என்றே இனி அழையுங்கள்!'
சென்னை: என்னை இனி தருண் தமிழ் விஜய் என்றே அழையுங்கள் என்று உத்தரகாண்ட் எம்பி தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.
கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைப்பதை முன்னின்று செய்து வரும் தருண் விஜய் எம்.பி. நேற்று சென்னையில் பேசுகையில், "இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். தமிழக மக்கள் என்னை அவர்களின் தம்பியாக கருதுகிறார்கள். என்னை தருண் விஜய் என்று அழைப்பதைவிட ‘தருண் தமிழ் விஜய்' என்று அழையுங்கள்.

திருவள்ளுவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் இந்தியா ஒட்டுக்கும் சொந்தமானவர்.
இந்திய வரலாறு என்பது வீர சிவாஜி போன்ற வடமாநில மன்னர்களுடன் முழுமையடையாது. தமிழக மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களையும் சேர்த்துதான் முழுமை அடையும்.
திருவள்ளுவர் இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவர் குறித்த ஆய்வு இருக்கைகள் அமைக்க பிரதமர் நரேந்திரமோடியிடம் வலியுறுத்துவேன்," என்றார்.












Click it and Unblock the Notifications