நாளையுடன் ஓய்கிறது ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரம்
ஏற்காடு: ஏற்காடு தனி தொகுதியின் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதையடுத்து அதிமுக, திமுக தரப்பில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ பெருமாள் மறைவைத் தொடர்ந்து ஏற்காட்டில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 4ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
அதிமுக சார்பில் பெ.சரோஜா, திமுக சார்பில் மாறன் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக, திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மற்ற 9 பேரும் சுயேச்சைகளே.

அதிமுக, திமுக வேட்பாளர்களுக்காக இரு கட்சியினரும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுகவுக்காக முதல்வர் ஜெயலலிதா சூறாவளிப் பிரசாரம் செய்தார். அதேபோல திமுகவுக்காக மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், நடிகர்கள், சரத்குமார் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடந்து வரும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதன் பின்னர் பிரசாரம் நடைபெறாது. மேலும் வெளியூர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும்.
நோட்டா
தமிழகத்தில் முதல் முறையாக ஏற்காடு இடைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்ற பொத்தான் அதாவது நோட்டா மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இங்குதான் பொருத்தப்ப
ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2,40,290 வாக்காளர்கள் உள்ளனர். பெண்கள்தான் அதிகம் உள்ளனர். 6 திருநங்கையரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 290 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்காக அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெறும்.
அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை தவிர மாவட்ட போலீசார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
269 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையதளத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது.
-
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications