6வது கட்ட தேர்தல்: தமிழகம், புதுவை உட்பட 117 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது!
சென்னை: லோக்சபா தேர்தலின் 6வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வடைகிறது.
நாட்டின் 16வது லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

ஐந்து கட்ட வாக்குப் பதிவும் பொதுவாக அமைதியாக விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. 6வது கட்ட வாக்குப் பதிவு வரும் 24-ந் தேதியன்று நடைபெற உள்ளது. தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் மொத்தம் 117 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் இதில் அடங்கும். 6வது கட்ட வாக்குப் பதிவை 2071 வேட்பாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்த தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் இந்த தொகுதிகளில் இறுதி நேர உச்சகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications