அதிமுக, திமுகவால் யார் பிரதமர் என்று கூற முடியுமா?: பிரேமலதா விஜயகாந்த்
விழுப்புரம்: அதிமுக, திமுகவால் யார் பிரதமர் என்று கூற முடியுமா இல்லை அவர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதை தான் கூற முடியுமா? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக வாக்களித்தபடி ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு பிரச்சனையை தீர்த்ததா என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
விழுப்புரத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று மாலை விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

5 முனை போட்டி
வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். நன்றாக சிந்தித்து வாக்களியுங்கள். தமிழகத்தில் தற்போது 5 முனை போட்டி உள்ளது. எங்கள் வெற்றி வேட்பாளர் உமாசங்கருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மோடி
மோடி குஜராத்தை முதன்மை மாநிலமாக வைத்துள்ளார். அவர் பிரதமர் ஆனால் நாட்டை லஞ்சம், ஊழல் இல்லாத வல்லரசாக ஆக்குவார்.

விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு எவ்வளவு காலம் இருந்தது என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.

மின்வெட்டு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்வெட்டு பிரச்சனையை தீர்ப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இன்றும் மின்வெட்டு பிரச்சனை உள்ளது. குடிநீர் பிரச்சனை, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகியவை குறித்து கேள்வி எழுப்பியதற்காக சட்டசபையில் இருந்து நீக்குகிறார்கள்.

பிரதமர்
நாங்கள் மோடி தான் பிரதமர் என்று கூறி வாக்கு கேட்கிறோம். அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் யார் பிரதமர் என்று கூற முடியுமா இல்லை அவர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதை தான் கூற முடியுமா?

பாஜக
திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்த ஊழலால் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது. வரும் தேர்தலில் பாஜக கூட்டணி 320 தொகுதிகளை கைப்பற்றும். வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கரம் சாலை அறிமுகப்படுத்தப்பட்டது போன்று, மோடி ஆட்சியில் நதிகள் இணைக்கப்படும். இந்தியா வல்லரசாக மாற முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications