தென்காசியில் கார் லாரி மோதி விபத்து.. ஜவுளி நிறுவன உரிமையாளர் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தென்காசியில் கார் லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் நெல்லையை சேர்ந்த பிரபல ஜவுளி நிறுவன உரிமையாளர் பலியடைந்து இருக்கிறார்.

நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, ஆகிய பகுதிகளில் அந்த பிரபல ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளர் செங்கோட்டையை சார்ந்த சுதன்.

car accident kills textile owner in nellai

இவர் கடிந்த 24ஆம் தேதி இரவு தென்காசியில் கடையை அடைத்து விட்டு அவர் இணைந்து இருக்கும் கிளப் மீட்டிங் முடித்துவிட்டு இரவு 11.30 மணியளவில் செங்கோட்டை வீடு நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது இலஞ்சி அருகிலுள்ள தனியார் நிறுவனம் அருகில் வரும் போது எதிரே வந்த சரக்கு லாரியில் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

காரின் முன்பக்கம் முழுமையாக லாரியின் முன் பகுதியில் சிக்கியது. இதில் கார் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. காரை ஓட்டிய சுதன் உடல் நசுங்கி பலியானார்.

இது குறித்து குற்றாலம் போலீசார், தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். சுதனின் உடலை கைப்பற்றி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+