திருவாடானை அருகே சாலை விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
திருவாடானை அருகே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாடானை: திருவாடானை அருகே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாடானை அருகே இருக்கும் பாசப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கொடூர விபத்து ஒன்று நடந்து இருக்கிறது. இரண்டு கார்கள் மோதிக் கொண்ட இந்த விபத்து காரணமாக மூன்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணம் அடைந்து இருக்கின்றனர். அயூப்கான், ஷகீரா இதில் மரணம் அடைந்துள்ளனர்.
மரணம் அடைந்தவர்களில் சைபுன்னிசா என்ற குழந்தையும் அடக்கம். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மரணம் அடைந்த நான்கு பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவனம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications