தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா, வெங்கட்ராமன், சாந்தா பணியாற்ற தடை கோரி வழக்கு
தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் பணியாற்ற தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் வெங்கட்ராமன், சாந்தா உள்ளிட்டோரும் ஆலோசகராக பணியாற்ற தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்
தமிழகத்தில் 41வது தலைமைச் செயலாளராக கேரளத்தை சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் 1976ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அவரை அரசு ஆலோசகராக நியமித்தார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவிற்கு பிடித்த அதிகாரியாக இருந்தார் ஷீலா பாலகிருஷ்ணன். இந்த நிலையில் தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் பணியாற்ற தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல் வெங்கட்ராமன், சாந்தா உள்ளிட்டோரும் ஆலோசகராக பணியாற்ற தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1983இல் அப்போதைய தமிழக முதல்வரான எம்.ஜி.ஆரால் சமூக நலத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், 2000இல் திமுக ஆட்சியிலும் சமூக நலத்துறை செயலாளர் பதவியை வகித்தார்.
ஆனால், அரசியல்ரீதியாக ஆராயத்தக்க மாற்றம் 2002லேயே நிகழ்ந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றபோது அரசு தரப்பில் நம்பத்தகுந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
2006இல் திமுக ஆட்சியின்போது கல்வி நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாக்கப்பட்டு வெளிச்சத்திலிருந்து ஒதுக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தபோது ஷீலாவின் கணவரும் அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியுமான பாலகிருஷ்ணன் அந்தப் பதவிக்குத் தேர்வாவார் என எதிர்பார்க்கப்பட்டபோது அவரது மனைவியான ஷீலாவே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மார்ச் மாதம் அவர் ஓய்வு பெற்றபின் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அது முதல் தொடர்ந்து ஆலோசகராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications