ஏற்காடு: வாக்காளர்களுக்கு பணம் திமுக நிர்வாகி கைது; ஏ.வ.வேலு மீது கொலை மிரட்டல் வழக்கு

ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 4ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக - திமுக இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. வாக்காளர்களை கவர போட்டி போட்டிக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம், பொருள் என அன்பளிப்பு கொடுப்பதை தவிர்க்க தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் பல இடங்களில் பணம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குற்பட்ட சின்னாகவுண்டாபுரம் செட்டியார் வட்டம் பகுதியில் அதிகாலை முதல் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

திமுகவைச்சேர்ந்தவர்கள் ஒரு லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அதிமுக ஆதரவாளர்கள் என மூன்றாக பிரித்து 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து வந்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தேசிங்கு ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச்சேர்ந்த கணேசன் மகன் சேகர் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது அம்மாபேரவை இணைச்செயலாளர் மெடிக்கல் ராஜா தலைமையில் உள்ள நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் தங்கராஜிடம் ஒப்படைத்தார். அவரிடம் இருந்த 22,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இதே காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு மீது கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காரிப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்ட்டா முத்து தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தி.மு.க முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, ஈரோடு இறைவன், கரூர் முரளி உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் வேலுமணியின் காரை வழிமறித்து கொலை மிரட்டல் விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணி காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications