Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீறப்பட்ட “ரூல்ஸ்”.. மண்ணோடு மண்ணான சென்னை மண்ணடி கட்டிடம்! உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதியின்றி மண்ணடியில் உள்ள பழமையான 4 மாடி கட்டிடத்தை இடிக்கும்போது விபத்து ஏற்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் பரத் சந்திரன் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை மண்ணடியில் அரண்மனைக்காரன் வீதியில் பரத் சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழமையான 4 மாடிக் கட்டிடம் அமைந்து இருக்கிறது. 60 ஆண்டுகள் பழமையான கட்டிடமாக இதை இன்று காலை புனரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அத்துடன் கட்டிடத்தின் சுவர்களும் இடிந்து விழுந்தன.

Case filed under 5 section against Chennai Mannady collapsed building owner

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெரும் சத்தத்துடன் காலை 10:30 மணியளவில் ஏற்பட்ட இந்த கட்டிட விபத்தில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிடம் அமைந்த இடத்தை சுற்றிலும் கற்களும், புழுதியுமாக காணப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிடம் அமைந்து இருக்கும் அரண்மனைக்காரன் வீதி என்பது குறுகலான பாதையை கொண்டது என்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை அடையாறு மற்றும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடத்தில் 4 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், உள்ளே யாரும் இல்லை என்றும், 2 பேர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தகலறிந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய தீயணைப்பு துறை டிஜிபி, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டிட சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கட்டிட உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் கட்டிடம் இடிந்த மண்ணடி பகுதிக்கு சென்ற தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீட்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

Case filed under 5 section against Chennai Mannady collapsed building owner

அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு "சென்னை மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புபடை மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 30 லாரிகளின் மூலமாக கட்டிட இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன.இன்னும் 3 மணி நேரத்தில் முழுமையாக கட்டிட கழிவுகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சொல்லி இருக்கிறார். 2 பேர் காயமடைந்து உள்ளார்கள். கட்டிட இடிபாடுகளில் 4 பேர் சிக்கி இருப்பதாக கூறப்படுவது வதந்தி." என்றார்.

இந்த நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் பரத் சந்திரன் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவித்தல், கவனக்குறைவாக செயல்படுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+