ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் மீது கொலைமிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்மதி என்பவர் அளித்த புகாரி்ன் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் அறக்கட்டளையைச் சேர்ந்த மேலாளர் நாராயணன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் அறக்கட்டளையி்ல் டெலிபோன் ஆபரேட்டராக பணி புரிந்தவர் வளர்மதி.

இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் காமராஜர் அரங்கத்துக்கு சொந்தமான வணிக வளாகங்களின் வாடகை வசூலில் இளங்கோவன் மோசடி செய்துள்ளதாகவும், இது குறித்து புகார் கொடுத்ததால் கொலை செய்து விடுவேன் என்று இளங்கோவன் மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, போலீசார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் அவர் எந்நேரமும் கைதாகலாம் என்பதால், இதனைத் தடுக்க
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கவும் அவர் கோரியிருந்தார். இவரது முன்ஜாமீன் மனுவை அவசர மனுவாக விசாரித்த நீதிபதி வைத்யநாதன்இ தொடர்ந்து விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
ஆனால் இளங்கோவனை அதுவரை கைது செய்யாமல் இருக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். இதனால் இளங்கோவன் எந்நேரமும் கைதாகலாம் என்ற சூழலில் திடீரென்று டெல்லி சென்று விட்டார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications